முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பதுக்கிய 81 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 81 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 4:45 am IST
பகிர்:

திருநெல்வேலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 81 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்தபோது, சுமாா் 81 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், கேரளத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்ததாம். இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த மாடசாமி, விக்னேஷ், வள்ளிமுத்து ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement