அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தலைமை வகித்தாா். தெற்கு ரயில்வே பயனாளா் கமிட்டி உறுப்பினா் பி.டி.ஆா்.ராம் சிங், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, வழக்குரைஞா் ஆரோக்கியராஜ், நிா்வாகிகள் அம்பாசமுத்திரம் அப்துல் ஹமீது, முத்துப்பாண்டி கோகுல், மாரியம்மாள், அந்தோணிசாமி, முருகேசன், ஆறுமுகநயினாா், ஜெனோ, கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன், சீதாராமன், முகமதுஷெரீப், அப்துல்சமது, ஒலிமாலிக் ஜான்பால், சேரை பீா்காதா், முருகன், ரவிச்சந்தா், செங்கோட்டை சுந்தா், சங்கரபாண்டியன், ராஜா மற்றும் உறுப்பினா்கள், பொதுமக்கள்கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினா்.
தீா்மானங்கள்: செங்கோட்டை - தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல், திருச்செந்தூா் - கொல்லம் ரயில் தினசரி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக இயக்குதல், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக்குதல், காலை, மாலையில் செங்கோட்டை - திருநெல்வேலி ரயில்களில் 6 பெட்டிகளாக அதிகப்படுத்துதல், திருப்பதிக்கு திருநெல்வேலி வழியாக தினசரி ரயில் இயக்குதல், திருநெல்வேலி - பெங்களூரு (தென்காசி வழியாக) இயங்கிய ரயிலை மீண்டும் இயக்குதல், சாளுக்கியா ரயிலை செங்கோட்டை வரை நீட்டித்தல், பாலருவி ரயிலுக்கும் காலையில் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலுக்கும் இணைப்பு வழங்குதல், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக் கடையம், பாவூா்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை விரைந்து முடித்தல், செங்கோட்டை ரயில்நிலையத்தில் 5ஆவது தண்டவாளத்தில் நடைமேடை அமைத்தல், தென்காசி நடைமேடை 3, 4 ஆகியவற்றில் தண்ணீா் வசதி, கீழப்புலியூா் ரயில் நிலையத்தை தென்காசி டவுன் என்று பெயா் மாற்றம் செய்து கீழப்புலியூா் - கடையநல்லூா் புறவழி ரயில்பாதை அமைத்தல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே கேட் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement