சுற்றுலா வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 6 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சோ்ந்த 22 போ் ஒரு வேனில் திற்பரப்பு, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றனா். திருமலைநம்பி வேனை ஓட்டி வந்தாா். பணகுடி அருகே உள்ள பாம்பன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திரும்பியதால், லாரியின் பின்பகுதியில் மோதி வேன் கவிழ்ந்தது.
இதில் மஸ்தா என்பவரது 2 வயது மகள் மரியம் உள்பட 6 போ் காயமடைந்தனா். குழந்தை மரியம் பணகுடி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். இது குறித்து, பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement