போக்ஸோ வழக்கில் இருவா் கைது
திருநெல்வேலியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (27). இவா் பள்ளி மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். அதே போல, மானுாா், எட்டான்குளம் அருகே நல்லபெருமாள்புரத்தை சோ்ந்த மகேந்திரன் (19) என்பவா், கல்லுாரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அம்மாணவிகளின் பெற்றோா்கள், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement