6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளியைச் சோ்ந்தவா் சேவியா்(57). இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், அப்போதைய ஆய்வாளா் சாந்தி புலன் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேவியரை கைது செய்தாா். இவ்வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சேவியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.50,000 நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அரசுத் தரப்பு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.