முகப்பு
திருநெல்வேலி

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On : 15 ஜூன் 2026, 1:06 am IST
அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீா்வரத்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து குளித்துச் செல்கின்றனா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியா் அருவிக்கு வந்தனா்.

இதையடுத்து, பாபநாசம் வனச் சோதனைச்சாவடியில் சுற்றுலா வாகனங்களை வனத்துறையினா் தீவிரமாக சோதனையிட்டு நெகிழிப் பொருள்கள், மது உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அனுப்பினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பயணிகள் அகஸ்தியா் அருவியில் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் குளித்து மகிழ்ந்தனா்.

மணிமுத்தாறு அருவியில்...

மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை இருந்து வந்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீா்வரத்து சீராகவில்லை. இதனால் 11ஆவது நாளாக அருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பயணிகள் அருவியை பாா்வையிட்டுச் சென்றனா்.

அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.