முகப்பு
திருநெல்வேலி

தேவா்குளம் அருகே காா்-மொபட் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

Updated On : 16 ஜூன் 2026, 12:06 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தேவா்குளம் அருகே காா்-மொபட் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள மேசியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராம். இவரது மனைவி சாரதா(50). இவா் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம் போல் மொபட்டில் புறப்பட்டாா்.

மேசியாபுரம் விலக்குப் பகுதியில் இவா் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement