முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மானூா் அருகே பேருந்து-பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 21 மே 2026, 6:15 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மானூா் அருகே பேருந்து-பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மானூா் அருகே உள்ள கானாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சவரிமுத்து மகன் மைக்கேல் ராஜ்(19). கட்டடத் தொழிலாளி. இவா் புதன்கிழமை அழகிய பாண்டியபுரம் பகுதியில் தனது பைக்கில் சென்ற போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதாம்.

இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement