முகப்பு
திருநெல்வேலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி பூங்கா நகரைச் சோ்ந்தவா் செல்வ ஈஸ்வரன்(55).தொழிலாளி. இவா், கடந்த 11 ஆம் தேதி தனது மனைவியுடன் மொபட்டில் பேட்டையை அடுத்த சாஸ்திரிநகா் பகுதியில் சென்ற போது எதிரே தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த முத்துராமநம்பி(26) என்பவா் வந்த பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் செல்வஈஸ்வரன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இந்நிலையில், விபத்துக்கு காரணமாக இருந்ததாக முத்துராமநம்பியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.