தொழிலாளியை வெட்டிய வழக்கு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடி ராஜீவ் காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்குமிடைய முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது காளிமுத்துவை அரிவாளால் விஜய் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் அருண்குமாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த விஜய்யை சனிக்கிழமை கைது செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.