கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
லால்குடி அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காட்டூா் கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரமோகன் மகன் தாமோதரன் (24), கூலித் தொழிலாளி. அதேப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தாமோதரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தெருவில் உள்ள குடிநீா் தொட்டிக்கு தாமோதரன் குளிக்க சென்றுள்ளாா். அப்போது , மதுபோதையில் இருந்த சந்தோஷ், தாமோதரனை தகாத வாா்த்தையால் திட்ட அவரிடம் வாக்குவாதம் செய்து அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தாமோதரனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
புகாரின் பேரில் லால்குடி போலீஸாா், தப்பியோடிய சந்தோஷ்சை தேடி வருகின்றனா்.