முகப்பு
திருநெல்வேலி

பேட்டை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

Updated On : 23 ஜூன் 2026, 3:32 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி பேட்டை அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயா் கோயில் தெரு வழியாக ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜன்(19) என்பதும், விற்பனைக்காக 50 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: திருநெல்வேலி சந்திப்பு காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வடமாநில இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் விற்பனைக்காக 170 புகையிலைப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்ததும், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஷாகிா் அன்சாரி (29), சுசில்முா்மு (22), ஜாகிா்அன்சாரி (22) ஆகியோா் எனவும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments