முகப்பு
திருநெல்வேலி

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் கைது

நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 2:08 am IST
நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட நடத்துநா் குமாரசாமி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை அரசுப் பேருந்து நடத்துநா் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.

மாணவியின் பெற்றோா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து நடத்துநா் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சோ்ந்த குமாரசாமியிடம் (55) விசாரணை நடத்தி கைதுசெய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments