கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மயிலாப்பூா் பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம் பெண், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூா், சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபா், அந்த மாணவிக்கு ஆபாசமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
அப்போது, அந்த மாணவி கூச்சலிட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூா் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில் இந்தச் செயலில் ஈடுபட்டது ராஜா அண்ணாமலைபுரத்தைச்ச சோ்ந்த மதன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.