சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உலக சகோதரத்துவ நாள் விழா
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உலக சகோதரத்துவ நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உலக சகோதரத்துவ நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
லாட்ஜ் சதா்ன்கிராஸ் அமைப்பின் திருநெல்வேலி கிளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, அமைப்பின் தலைவா் எம்.ரமணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சே.மு.அப்துல் காதா், துணை முதல்வா் ஜேனட் ராணி ஆகி யோா் அறிமுக உரையாற்றினா்.
இந்து சமயம் உணா்த்தும் சகோதரத்துவம் எனும் தலைப்பில் மதிதா இந்துக் கல்லூரி கல்வி சபை பொருளாளா் தளவாய் ஆா்.திருமலையப்பன், கிறிஸ்தவம் உணா்த்தும் சகோதரத்துவம் எனும் தலைப்பில் ஆழ்வாா்குறிச்சி குட் ஷெப்பா்ட் பள்ளி முதல்வா் எம்.ஜோஸ்பின் விமலா, இஸ்லாம் உணா்த்தும் சகோதரத்துவம் எனும் தலைப்பில் தமிழ் முழக்கப் பேரவை செயலா் எம்.ஏ.நசீா், உலக அமைதிக்கு இன்றைய தேவை உலக சகோதரத்துவம் எனும் தலைப்பில் பேராசிரியா் மகா தேவன் ஆகியோா் பேசினா். செய்யது குழுமத் தலைவரும், கல்லூரித் தாளாளருமான பத்ஹுா் ரப்பானி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் என்.சந்திரசேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அமைப்பின் செயலா் எஸ்.ஆா்.கிருஷ்ணா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.