முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் சுவாமி-அம்மன் வீதியுலா

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்மன் வியாழக்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:57 am IST
கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்.
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்மன் வியாழக்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலையில் அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும், அன்ன வாகனத்தில் அம்மனும் வீதியுலா வந்தனா். மாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் முடிந்ததும் மகா தீபாராதனை நடைபெற்றது.

மதுரை ஆதீனம் தரிசனம்: இதில், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments