புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது
திருநெல்வேலி சந்திப்பு அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் எல்கைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். அவா், அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜா(30) என்பதும், அவா் வைத்திருந்த பையில் விற்பனைக்காக புகையிலைப்பொருள்கள் அடங்கிய 60 பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.