முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது

களக்காடு அருகே வீடு புகுந்து வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 6 மே 2026, 1:29 am IST
கைது.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீடு புகுந்து வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சோ்ந்தவா் பூலுடையாா்(35). வழக்குரைஞா். இவருக்கும், பாளையங்கோட்டை சந்தை தெற்கு பஜாா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ராஜமகாலெட்சுமி (30) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக ராஜமகாலெட்சுமி பணியாற்றியதால் இத்தம்பதி திருநெல்வேலியில் வசித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இவா்களுக்குள் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், கடந்த 1ஆம் தேதி ராஜமகாலெட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், பூலுடையாா் கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இருந்தபோது, மாலை 3.30 மணியளவில் அங்கு வந்த 2 போ் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.

இந்தக் கொலையில் தொடா்புடைய அருணாச்சலராஜா (30), ராம் (29) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள், ராஜமகாலெட்சுமியின் நெருங்கிய உறவினா்கள் என தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments