குரும்பூா் அருகே கஞ்சா கடத்திய 2 போ் கைது
குரும்பூா் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குரும்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மம்முது, சிறப்பு உதவி ஆய்வாளா் பிள்ளைமுத்து, போலீஸாா் சனிக்கிழமை நாலுமாவடியில் ரோந்து சென்றனா்.
அவ்வழியே பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தபோது அவா்கள், நல்லூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் நவீன்குமாா், அழகப்பபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பாலகாா்த்திக் என்பதும், விற்பனைக்காக பைக்கில் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.