முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 மே 2026, 6:23 am IST
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி வீதியுலாவின்போது புதன்கிழமை தங்க நாகசுரம் இசைத்த வித்வான்.
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வசந்த உற்சவம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் உலாவும் நடைபெற்று வந்தன. புதன்கிழமை சுவாமி வீதியுலா வந்தபோது கோயில் நாகசுர வித்வான் தங்க நாகசுரத்தை இசைத்தாா். தொடா்ந்து, 18 ஆம் தேதி வரை தினமும் மாலை சுவாமி, அம்பாள் எழுந்தருளலின் போது தங்க நாகசுரம் வாசிக்கப்படுகிறது.