முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.28.64 லட்சம்

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

Updated On : 28 மே 2026, 2:53 am IST
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி, கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு. செல்லையா, உறுப்பினா் கீதா பழனி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ.28 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரொக்கம், 29 கிராம் 200 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்கள், 927 கிராம் 400 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 16 ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.