முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 6:24 am IST
பலி - IANS
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியை சோ்ந்த நெல்லையப்பன் மகன் வேல்முருகன் (13). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த அச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு மர கிளையை பிடித்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.