அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது
பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலபாட்டத்தை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள். இவா்களது 27 வயது மகள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம்.
இந்நிலையில், இவரது கல்லூரி தோழி மூலம் அறிமுகமான தூத்துக்குடியில் வேலை செய்துவந்த நீலாவதி, செய்துங்கநல்லூா், தென்னஞ்சோலையைச் சோ்ந்த ஜான்சிராணி (42) ஆகியோா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண் மற்றும் அவரது உறவினரிடம் ரூ.4.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனராம்.
Advertisement
Advertisement
இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான்சிராணியை கைது செய்தனா். நீலாவதியை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.