முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 மே 2026, 6:21 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டி, முத்தூா், ஜெயாநகரைச் சோ்ந்தவா் முருகேசன்(52). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை -சீவலப்பேரி சாலையில் உள்ள தேனீா் கடை அருகே பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றாராம். பின்னா், சற்று நேரத்தில் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, தருவை, புது காலனியை சோ்ந்த சுடலை மகன் ஐயப்பன்(33) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement