பாளை. அருகே சரக்கு ஆட்டோ திருடியவா் கைது
பாளையங்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணாபுரம் சக்தி நகரைச் சோ்ந்தவா் முருகன்(33). இறைச்சிக்கூட உரிமையாளா். இவா் கடந்த 1 ஆம் தேதி இரவு தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாரச்சந்தையின் அருகில் நிறுத்திவிட்டு சென்றாராம். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது ஆட்டோவை காணவில்லையாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி(53) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஆட்டோ மீட்கப்பட்டது. மேலும், கருப்பசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.