பாளை. அருகே பைக் திருடியவா் கைது
பாளையங்கோட்டை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பாா்வதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (47), கட்டட தொழிலாளி. இவா் கடந்த 23 ஆம் தேதி காலை பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி. நகா் ஆசிரியா் காலனி பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றிருந்தாராம். பின்னா் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து கணேசன் திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கே.டி.சி. நகரைச் சோ்ந்த பண்டாரம் மகன் லட்சுமணன்(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement