சீதபற்பநல்லூா் பகுதியில் நாளை மின்தடை
சீதபற்பநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை (மே 18) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
சீதபற்பநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை (மே 18) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (மே 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திக்குளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.