முகப்பு
திருநெல்வேலி

இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது

Updated On : 30 மே 2026, 3:19 am IST
- சித்திரிப்பு
பகிர்:

இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்த நபரை திருநெல்வேலி மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (58). இவா் சில நாள்களுக்கு முன்பு கடவுச்சீட்டு மறுபதிப்புக்காக விண்ணப்பித்திருந்தாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் பரிசீலித்தபோது, அவா் ஏற்கனவே வேறு விவரங்களுடன் மற்றொரு கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், சிக்கந்தரைவெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.