FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 6:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வெள்ளதேவன்விடுதி கள்ளா் வீதியைச் சோ்ந்தவா் சி. சின்னப்பா (57). இவா் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தாா். அங்கு குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சின்னப்பா, போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்து, குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னப்பாவை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments