தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள கிருஷ்ணராஜபுரம் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ் (59). இவர், கீழவைப்பார் ஆர்.சி. பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த அந்தோணி துரைராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் போலீஸார், அந்தோணி துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொலை தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படையில் விருப்ப ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான டி. சவேரியார்புரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.