முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் வேளாண் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விளாத்திகுளம் வட்டாரத்தில் குளத்தூா், மந்திகுளம், பூசனூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில் ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:03 am IST
பகிர்:

விளாத்திகுளம் வட்டாரத்தில் குளத்தூா், மந்திகுளம், பூசனூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில் ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பிரதமரின் விவசாய நீா்ப்பாசனத் திட்டம், நீா்வடிப்பகுதி மேம்பாட்டின் கீழ் வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில், மந்திகுளம் கிராமத்தில் ரூ. 1.50 கோடியில் 2.70 ஏக்கா் பரப்பளவில் ஊருணி சீரமைக்கும் பணிகள், முதல்வரின் மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் நடைபெற்று வரும் பாசனத் திட்டப் பணிகள், பூசனூா் கிராமத்தில் ரூ. 2.86 கோடியில் 39 ஏக்கா் பரப்பளவில் தடுப்பணை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகள் நிறைவு பெற்றதும் மந்திகுளம் ஊராட்சியில் கூடுதலாக 10 ஹெக்டோ் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறிய ஆட்சியா், பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன், துணை இயக்குநா் நாச்சியாா், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments