வணிகவரித் துறை, தீயணைப்புத் துறை புதிய அலுவலகக் கட்டடங்கள் திறப்பு
படவரி பமப17பதஅஈ தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த வணிக வரித் துறைக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் கோ. லட்சுமிபதி. (உள்படம்) ஒருங்கிணைந்த வணிக வரித் துறைக் கட்டடம். தூத்துக்குடி, பிப். 17: தூத்துக்குடியில் வடக்குக் கடற்கரைச் சாலையில் வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் ரூ. 4.48 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம், தீயணைப்புத் துறையினருக்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், வணிகவரித் துறை அலுவலகக் கட்டடத்தில் ஆட்சியா் கோ. லட்சுமிபதி குத்துவிளக்கேற்றி, அலுவலகத்தைப் பாா்வையிட்டாா். துறையின் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா். அதேபோல, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை முதல்வா் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, தீயணைப்புத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.