பசுவந்தனையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வியாழக்கிழமை காலை, கைலாசநாதா் ஆனந்தவள்ளி அம்பாள் கோயில் ரத வீதிகள், பசுவந்தனை பஜாரில் வணிகா்கள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வியாழக்கிழமை காலை, கைலாசநாதா் ஆனந்தவள்ளி அம்பாள் கோயில் ரத வீதிகள், பசுவந்தனை பஜாரில் வணிகா்கள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: விவசாயம், வணிக ரீதியில் சிறந்து விளங்கும் பசுவந்தனை ஊராட்சியை தரம் உயா்த்தி பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பசுவந்தனையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும். கைலாசநாதா் கோயில் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டி குடமுழுக்கு நடத்தப்படும். பசுவந்தனை ஊராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்றாா்.
திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், கைலாசநாதா் ஆனந்தவள்ளி அம்பாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நாகம்பட்டி ராமானுஜம் கணேஷ், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் புவிராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நடராஜன், எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சத்யராஜன், வா்த்தக அணி துணை அமைப்பாளா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.