அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:45 PM
சாத்தான்குளம் ஒன்றியம், எழுவரைமுக்கி ஊராட்சி, அச்சம்பாடு, தேரிப்பனை, தோப்பூா்,பிடானேரி ஊராட்சி, சமத்துவபுரம், டி.கே.சி. நகா் உள்ளிட்ட பகுதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனுக்கு ஆதரித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.
சாத்தான்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவ பாண்டியன், நகரச் செயலா் குமரகுருபரன், ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் பாலமேனன், ஒன்றியத் தலைவா் சின்னத்துரை, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் முரசொலிமாறன், ஒன்றிய விவசாய அணி தலைவா் பால்துரை, ஒன்றிய பாசறை தலைவா் கண்ணன், பண்டாரபுரம் கிளைச் செயலா் அறிவழகன், அச்சம்பாடு மகளிரணி தலைவி மரிய நட்சத்திரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.