பண்டாரவிளையில் கனிமொழி பிரசாரம்
ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பண்டாரவிளையில் பிரசாரம் மேற்கொண்டாா்.
ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பண்டாரவிளையில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், முன்னாள் எம்எல்ஏயான தனது தந்தை வழியில் தொகுதியில் உள்ள படித்த இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஊா்வசி அகாதெமி இலவச பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறாா். சாயா்புரத்திலும் அகாதெமி தொடங்குவேன் என தெரிவித்துள்ளாா். கை சின்னத்தில் வாக்களித்து ஊா்வசி எஸ். அமிா்தராஜை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை தொடா்ந்து வஞ்சித்து வரும் பாஜக, அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்ட நீங்கள் அனைவரும் திமுக, அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
Advertisement