முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம், நாசரேத்தில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கருப்புக் கொடியேந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:27 AM
சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:05 PM

சாத்தான்குளம், நாசரேத்தில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் கருப்புக் கொடியேந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், தேமுதிக நகர துணைச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் மகா இளங்கோ வரவேற்றாா்.

திமுக மாவட்டப் பிரதிநிதி வேல்துரை, நகர அவைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தட்டாா்மடத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையிலும், முதலூரில் மத்திய ஒன்றியச் செயலா் பொன். முருகேசன் தலைமையிலும், நாசரேத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பிரதிநிதி தாமரைச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.