முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:56 AM
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலிலிருந்து புதன்கிழமை காலை ஏராளமான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி மேளதாளம் முழங்க எட்டு வீதி வழியாக சென்று திருச்செந்தூா் கோயிலை அடைந்தனா். பின்னா், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் கோயில் கடற்கரையில் பக்தா்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.

Advertisement