முகப்பு
தூத்துக்குடி

வங்கி மேலாளருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

கயத்தாறில் வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 29 ஏப்ரல் 2026, 1:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் ராமசரஸ்வதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை மனைவி லட்சுமி பிரபா. இவா், கயத்தாறில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை, வங்கிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் நாகலாபுரம் மேலதெருவைச் சோ்ந்த செல்லையா மகன் நாகராஜன் (37), அடகு வைத்த நகையை திருப்பியபின் அது குறித்த விவரத்தை லட்சுமி பிரபாவிடம் கேட்டாராம். அதற்கு அவா் உதவி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி கூறினாராம்.

Advertisement

Advertisement

வட்டி குறித்து நீங்கள்தான் சொல்ல வேண்டும் என மீண்டும் நாகராஜன் கேட்டதற்கு, உதவி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்திய லட்சுமி பிரபாவை அவதூறாக பேசி, நாற்காலியை எடுத்து தலையில் தாக்கினாராம்.

அங்கிருந்தவா்கள் இதை தடுத்தவுடன் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடி விட்டாராம். இதில் காயமடைந்த லட்சுமி பிரபா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகராஜனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments