கடையை சேதப்படுத்திய வழக்கு: இளைஞா் கைது
கயத்தாறில் முடி திருத்தம் செய்யும் கடையை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறில் முடி திருத்தம் செய்யும் கடையை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே பன்னீா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் துரை. இவா் கயத்தாறு - கடம்பூா் சாலையில் முடி திருத்தம் செய்யும் கடையை நடத்தி வருகிறாா்.
இவரது கடைக்குள் கயத்தாறு விஆா்டி நகரைச் சோ்ந்த குட்டி மகன் அருண் (26) என்பவா் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த கண்ணாடியை சேதப்படுத்தினாராம்.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, அருணை தேடி நிலையில் வியாழக்கிழமை அவரை கைது செய்தனா்.