தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.
40 நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
வேதியியல் துறைத் தலைவா் இருதய அன்டோனட் சோபியா தலைமை வகித்தாா். பேராசிரியைகள் பா்வின் சுல்தானா, திவ்யா, ஸொஸிமஸ் திவ்யா லோபோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement