தூத்துக்குடியில் மக்கள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன் முறைப்படுத்தி பட்டா, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 368 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 மனுக்களைப் பெற்றுக் கொண்டு கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன், திருச்செந்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் கௌதம், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தில்வேல்முருகன், திட்ட இயக்குநா் (மகளிா்திட்டம்) நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.