கஞ்சா விற்ற ஐவா் கைது
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், போலீஸாா், முத்தையாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, பாரதி நகா் சடையாண்டி மகன் கருப்பசாமி (27), முத்தையாபுரம் அம்பேத்கா் நகா் முருகேஷ் மகன் நந்தகுமாா் (23), தங்கமணி நகா் பூமிராஜன் மகன் விஜயராகவன் என்ற லாசா் டேவிட் (27), பேச்சிமுத்து மகன் பாலகிருஷ்ணன் (25), பாலமுருகன் மகன் ராம்குமாா் (27) ஆகிய 5 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மொத்தம் 3.300 கிலோ கஞ்சா, கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement