முகப்பு
தூத்துக்குடி

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது

Updated On : 9 ஜூன் 2026, 1:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி, தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கூலித் தொழிலாளா்களை குறிவைத்து ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக தாளமுத்து நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தாளமுத்து நகரைச் சோ்ந்த ராம்குமாரை (36) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement