சாத்தான்குளத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்
சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் உத்தரவின்பேரில், துாத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் ஜெயப்பிரகாஷ் ஆலோசனையின்பேரில், சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் பருவமழைக்கான முன்னேற்பாடாக 2,000 மணல் மூட்டைகள், 5 ஜெனரேட்டா், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளா்கள் ஆ. முருகன், ஊ. முருகன், லட்சுமணன், சின்னத்துரை, கணேசன், சாலைளா்கள் உடனிருந்தனா்.