முகப்பு
தூத்துக்குடி

சாயா்புரத்தில் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்எல்ஏ உத்தரவு

சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:42 am IST
சாயா்புரம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.
பகிர்:

சாயா்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

சாயா்புரத்தில் டாக்டா் ஜி. யு. போப் பேருந்து நிலையத்தை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 இன் கீழ் புதியதாக ஒரு கோடியை 67 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

தற்போது வரை அந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. மேலும், இங்கு தனியாா் வாகனங்களை பலா் நிறுத்தி வைத்து உள்ளனா். மேலும் இங்கு உள்ள வணிக வளாகங்களில் கழிப்பறைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, இப்பேருந்து நிலையத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பேரூராட்சி அதிகாரிகளிடம் இப்பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினாா்.