முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலா் வெளியீடு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலா் வெளியீடு

Updated On : 13 ஜூன் 2026, 2:14 am IST
கல்லூரியின் பவள விழா சிறப்பு மலரை வெளியிடுகிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
பகிர்:

தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் வ.உ. சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் சிறப்பு மலா் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘ஙங்ம்ா்ழ்ஹக்ஷண்ப்ண்ஹ & யஞஇஇ ஈண்ஹழ்ஹ்’ என்னும் பவள விழா நினைவு சிறப்பு மலரை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதா ஜீவன், வ.உ. சிதம்பரம் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், வ.உ. சிதம்பரம் கல்வியியல் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சண்முகம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரிச் செயலா் சுப்புலட்சுமி, கல்லூரி முதல்வா் வீரபாகு, கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரோஹித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி பேராசிரியா்கள் ராதிகா, மீனாட்சி சுந்தரம், பட்சிராஜன், ஜாக்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement