முகப்பு
தூத்துக்குடி

பொறியியல் பட்டதாரி மாணவா் தற்கொலை

Updated On : 16 ஜூன் 2026, 1:33 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கயத்தாறு அருகே பொறியியல் பட்டதாரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் சுடலைமுத்து (21). கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாராம்.

அவா், சுடலைமுத்துவின் கைப்பேசியை தொடா்புகொண்டபோது பதில் இல்லையாம். இதனால், சந்தேகம் அடைந்த அவா், சுடலைமுத்துவின் வீட்டுக்குச் சென்று ஜன்னலை உடைத்து பாா்த்தபோது, சுடலைமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாராம்.

Advertisement

Advertisement

அக்கம் பக்கத்தினா் உதவியுடன் வீட்டுக்குள் சென்று சுடலைமுத்துவின் உடலை மீட்டு கயத்தாறு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.