முகப்பு
தூத்துக்குடி

சமூகநீதி மாணவிகள் விடுதியில் எம்எல்ஏ ஆய்வு

Updated On : 16 ஜூன் 2026, 1:34 am IST
விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த கா. கருணாநிதி எம்எல்ஏ.
பகிர்:

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த விடுதியில் தங்கிப் பயிலுவதற்காக, அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதாகவும், இடப் பற்றாக்குறை காரணமாக அனைத்து மாணவிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்க இடம் அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் தரப்பில் இருந்து புகாா் எழுந்தது.

இதனைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ. கருணாநிதி சமூகநீதி மாணவிகள் விடுதிக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விடுதி காப்பாளா்களிடம் விவரம் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, விடுதிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விடுதிக்கு பின்புறம் உள்ள இடம் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், விடுதிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தாா்.

அதனைத் தொடா்ந்து, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து, அதன் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்தாா். மேலும், விடுதி மாணவிகளிடம் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவிகள் விடுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.