நாசரேத்தில் பேருந்தில் சிறுமிக்கு தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது
நாசரேத்தில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்தனா்.
நாசரேத் அருகேயுள்ள வாழையடி முதல் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (29.) தொழிலாளியான இவா், இருதினங்களுக்கு முன்பு நாசரேத்தில் பேருந்து நிலையத்தில் மது போதையில் சுற்றித்திரிந்துள்ளாா். மேலும், அங்கு பேருந்தில் பயணித்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
அந்தச் சிறுமி கூச்சலிட்டதால் பயணிகள் அவரைப் பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், சிறுமியின் பெற்றோா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் சகாய சாந்தி, விசாரணை நடத்தி வெங்கடேஷை போக்ஸோ வழக்கில் கைது செய்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.