முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகள் அதிகரிக்க அமைச்சரிடம் கோரிக்கை

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரிடம் காக்கும் கரங்கள் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:02 am IST
அமைச்சா் ஏ. ஸ்ரீதரிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவா் எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆபிதீன்.
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரிடம் காக்கும் கரங்கள் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வரையறை செய்யவேண்டும். குடிநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவா் எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆபிதீன், திருச்செந்தூருக்கு கடந்த சனிக்கிழமை வந்த தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஏ. ஸ்ரீதரை சந்தித்து மனுஅளித்தாா். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சா் கூறினாா்.

அப்போது, தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு இணைச் செயலா் சாகுல் ஹமீது, காக்கும் கரங்கள் உறுப்பினரும், தவெக திருச்செந்தூா் ஒன்றிய இணைச் செயலருமான எம்.ஜே. முத்து முஹம்மது , காக்கும் கரங்கள், தவெக உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments